×

திருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, ஜன.18: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுவூடல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழா. சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று இந்த விழா நடத்தப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு நேற்று முன்தினம் திருவூடல் தெருவில் திருவூடல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்ேபாது, ஊடல் காரணமாக அம்மன் கோயிலுக்கும், அண்ணாமலையார் குமரக்கோயிலுக்கும் சென்றனர்.

அதன்தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை 5 மணியளவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டுக்கு இருமுறை கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தீபம் முடிந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து, 2வது முறையாக திருவூடல் திருவிழாவையொட்டி நேற்று கிரிவலம் சென்றனர்.பின்னர், ஊடல் தீர்ந்ததை விளக்கும் வகையில், அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் விழா சிறப்பாக நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் அம்மனுடன் எழுந்தருளி அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
===============================

Tags : reunion festival ,Thiruvannamalai ,Gomallam Annamalai Amman ,Swami ,Annamalaiyar Kilavalam Thalaiva ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...