பெரம்பூர்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் மதியம் ஆபரேஷன் தியேட்டரில் ஒரு மர்ம நபர் வார்டு பாய் சீருடையில் நுழைந்தார். இதேப்போன்று, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண், டாக்டர்கள் சீருடையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை, பழைய சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு சிறை கைதிகளுக்கு என தனியாக ஒரு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில் எலும்பு சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்குள் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர் வார்டு பாய் உடை அணிந்து உள்ளே நுழைந்தார். அவர் மீது டாக்டர், நர்ஸ் உள்ளிட்டோருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.