கரூர், ஜன. 3: கரூர் மாவட்டம் மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆறு ஓடுகிறது. மேலப்பாளையம் பகுதியில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் ஏற்றி செல்லும் வகையில் குவாரி அமைக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக செயல்பட்டு வருகிறது. கரூர், ராயனூர், காந்தி கிராமம், தாந்தோணிமலை, மேலப்பாளையம், வடக்குப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தினம்தோறும் இந்த பகுதி குவாரிக்கு சென்று மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து மேலப்பாளையம் வழியாக மாட்டு வண்டிகள் சென்று வந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் மேலப்பாளையம் பகுதி சாலை பராமரிப்புக்காக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி செல்பவர்கள் தினமும் ஒரு வண்டிக்கு ரூ.50யை இந்த கிராமத்துக்கு தர வேண்டுமென மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் பேசப்பட்டது. இதை பெரும்பாலானோர் ஏற்று கொண்டதாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் இதை ஏற்று கொள்ளவில்லை.