காசிமேடு, ஜன. 3: சவ ஊர்வலத்தின் நடுவே ஹாரன் அடித்து சென்றதால் கற்களை வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை மணலியில் இருந்து பாரிமுனைக்கு மாநகர பஸ் (தஎ 56டி) இயக்கப்படுகிறது. இதில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.நேற்று மதியம் மாநகர பஸ் பாரிமுனை நோக்கி புறப்பட்டது. திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (32) பணியில் இருந்தார். காசிமேடு அருகே ஜீவரத்தினம் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையில் சவ ஊர்வலம் சென்றது. பஸ் டிரைவர் மணிகண்டன் ஹாரன் அடித்து கொண்டு சென்றார்.