. மெக்கானிக்கிடம் செல்போன் பறிப்பு

கெங்கவல்லி, டிச. 21: கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் ரவி(43). நடுவலூரில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழியில் தம்மம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தம்பியின் கடைக்கு சென்ற ரவி, சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்ேபாது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர்,கண்ணிமைக்கும் நேரத்தில் ரவியை கீழே தள்ளிவிட்டதுடன், அவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.சுதாரித்து எழுந்த ரவி, தனது டூவீலரில் அவர்களை துரத்திச்சென்றார். ஆனால், அவர்கள் அதற்குள் மறைந்துவிட்டனர். இதுகுறித்து ரவி கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சிவசக்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை ேதடி வருகிறார். 

Related Stories: