திருப்பூர், டிச.20:திருப்பூரில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போராட்டங்களும் அதற்கான நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்த விளக்கக்கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர், கோர்ட் வீதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் சுந்திரமூர்த்தி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமல்ராஜ் தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் கனகராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.