×

காட்டாத்துறை அருகே 5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மருத்துவ முகாமில் வாலிபரின் குட்டு வெளியானது

மார்த்தாண்டம், டிச. 12:  காட்டாத்துறை அருகே 5ம் வகுப்பு மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்த வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குமரி மாவட்டம் சாமியார்மடம் அடுத்த காட்டாத்துறை அருகே உள்ள ஒரு பள்ளியில், சமீபத்தில் கோதநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பரிேசாதனை செய்த போது, அங்கிருந்த பெண் மருத்துவரிடம் அடிக்கடி வயிறு வலிப்பதாக மாணவிகள் 2 பேர் கூறினர். அவர்களுக்கு பரிசோதனை செய்து, விசாரித்த போது வாலிபர் ஒருவர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இது பற்றி அந்த பெண் மருத்துவர்  ஆசிரியைகளிடம் விசாரித்தார்.

அப்போது மாணவிகள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்தாலே மிகவும் சோர்வுடன் இருப்பார்கள் என தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மஞ்சுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் அலுவலர்கள் வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்த போது, காட்டாத்துறை கவியலூர் பகுதியில் மாணவிகளின் வீடு அருகே வசிக்கும் சரத் என்ற வாலிபர் தான் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மஞ்சு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப் இன்ஸ்பெக்டர் பேபி தங்கம் ஆகியோர் மாணவிகளிடம் விசாரித்து, சரத் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Kathavartha ,Sexually Disturbed Medical Camp ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...