தாம்பரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தாம்பரத்தில் நேற்று தொடங்கியது. இதில் தாம்பரம் கோட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜானகிராமன் கூறுகையில், ‘‘தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.