சென்னை1: அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில், வரும் 17ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை சுதா தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தபட்டோருக்காக சமூக இட ஒதுக்கீடும், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல், மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.