ஆவடி: ஆவடி நகராட்சி பகுதியில் 3.16 கோடியில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டது. ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5 பூங்கா அமைக்கும் பணிக்காக 3.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அந்தோணி நகர், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, லாசர் நகர், பாலாஜி நகர், ராம் நகர் ஆகிய பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களில் நடைபாதை, குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள், எழில்மிகு பசுமை தோட்டங்கள், இருக்கைகள், மின்விளக்குகள், நீரூற்றுக்கள் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.