உடுமலை, டிச. 11: கணக்கம்பாளையம் அரசு ஊழியர், ஓய்வூதியர், குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முறைகேடான குடிநீர் இணைப்பை முறைப்படுத்தி ஊராட்சிக்கு நிதி இழப்பை தவிர்க்கவும், இணைப்பு பெற்றவர்களுக்கு உரிய டெபாசிட் ரசீது, குடிநீர் கட்டண ரசீது வழங்கவும், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலசந்திரமூர்த்தி நன்றி கூறினார்.