உடுமலை, டிச. 11: உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகே செல்லும் பிஏபி கால்வாய் சாலை வழியாக பழனி ரோடு வெஞ்சமடை வரை செல்லும் சாலை உள்ளது. 3 கிமீ தூரம் உள்ள இந்த சாலையை குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை செல்லும் பகுதியில் 20 நகர் பகுதிகள் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலையின் குறுக்கே தடுப்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது. கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.ஆனால் இதையும் மீறி சில உயரமான டெம்போக்கள் இவ்வழியை பயன்படுத்துகின்றன. சமீபத்தில் வாகனம் ஒன்று இடித்ததில் தடுப்பு கம்பி சேதம் அடைந்ததுள்ளது. வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளதால் இந்த தடுப்பு கம்பியை சரிசெய்ய வேண்டும்.