×

எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்தவருக்கு வலை

நாங்குநேரி, டிச. 11:    மூன்றடைப்பு  எஸ்.ஐ. ஜெயக்குமார் மற்றும் போலீசார் முண்டசாமி, ரெங்கநாதராஜா ஆகியோர் பூலம்விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சிங்கிகுளத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை  நடத்த முயன்றனர். ஆனால் மணல் கடத்தி வந்த லாரி நிற்காமல் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டதுடன் லாரியில் வந்த நபர், எஸ்.ஐ. மற்றும் போலீசாருக்கு  கொலை மிரட்டல் விடுத்து லாரியுடன் தப்பிச்சென்றார். விசாரணையில் அவர், மஞ்சங்குளத்தை சேர்ந்த  வாலசுடலைக்கண்ணு மகன் சுடலைகண்ணு (36) என்பதும், அவர் மீது ஏற்கனவே  கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீசார் சுடலைகண்ணுவைத் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது