இளம்பிள்ளை, நவ.28: இளம்பிள்ளை அருகே வங்கி மேலாளர் போல் நடித்து முதியவரிடம் ₹98 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கேகேநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (61). இவர் இரும்பாலையில் ஆப்ரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு கடந்த 18ம் தேதி வங்கி மேலாளர் பேசுவதாகவும், தங்களுடைய ஏடிஎம் எண்ணை கொடுக்குமாறும் மர்ம நபர் பேசியுள்ளார். அதை நம்பி பெரியசாமியும் நம்பரை கொடுத்துள்ளார். இந்நிலையில், அவருடைய செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.