×

ஆந்திராவை சேர்ந்தவரா? தீக்காயத்துடன் வந்தவர் சாவு

சேலம், நவ.15:  சேலம் எருமாபாளையம் அய்யங்கார் பேக்கரி முன்பு கடந்த 30ம்தேதி காலை 5மணி அளவில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் 50 வயது மதிக்கதக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார்.  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீக்காயங்களுடன் வந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரே தீ வைத்துக்கொண்டாரா? அல்லது யாராவது தீ வைத்தார்களா? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. மேலும் அவர் தெலுங்கில் பேசினார். எனவே அவர் ஆந்திராவை சேர்ந்தராக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 11ம்தேதி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்