சேலம், நவ. 15:சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்டிஓவாக பணியாற்றி வருபவர் செல்வன். இவர் மீது அம்மம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி புவனேஸ்வரி, பட்டா கேட்டு சென்ற தனக்கு கோட்டாட்சியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆத்தூர் டவுன் போலீசார், ஆர்டிஓ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்டிஓ செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது புகார் கொடுத்த புவனேஸ்வரி, ரவுடி ஒருவரின் தூண்டுதலின் பேரில் பொய்யான புகாரை கொடுத்துள்ளார். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.