சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது முதல் முறையாக மொபைல் செயலி மூலம் நடத்தப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் செல்லும் இடங்களில் சாலைகளில் திரியும் நாய்களை புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.