ரகளையில் ஈடுபட்ட வாலிபருக்கு பாட்டில் குத்து

தாரமங்கலம்,  நவ.14: தாரமங்கலம்  நான்கு ரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை(எண் 7275) மற்றும்  பார் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு மது குடிக்க  வந்த ஆரூர்பட்டி நந்தன்வலவு பகுதியைச் சேர்ந்த அர்த்தனாரி மகன்  மணிகண்டன்(35) என்பவர் பார் மூடும் நேரம் முடிந்த பிறகும், வெளியேற மறுத்து, உள்ளே  உட்கார்ந்து கொண்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்ேபாது, அங்கு வந்த கட்டிமாரன் வளவு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமார்(30)  என்பவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த  குமார், அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து மணிகண்டன் வயிற்றில் குத்தி விட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் விரைந்து சென்று மணிகண்டனை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிந்து தப்பியோடிய குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: