சென்னை, அக். 31: காசிமேடு காசிபுரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் தேசப்பன் (32). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு, மீன்பிடி துறைமுகம், ராயபுரம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகளில் சிக்கி 13 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த தேசப்பன் தலைமறைவானார். இந்நிலையில், காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.