திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஜோதி நகர் அருகே காலடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஏராளமானோர் அடிமனை வாடகைதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், கோயில் இடத்தில் இரும்பு குடோன் நடத்திவரும் ஜெகன்மோகன் மற்றும் அன்ஸ்ராஜ் போத்ரா ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அடிமனை வாடகை கட்டாமல், சுமார் ₹20 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர்.