நாகை,அக்.26: கீழ்வேளூர் அருகே காகூரில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று எஸ்பியிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூரை சேர்ந்த தெற்கு பாப்பாக்குடி, வடக்கு பாப்பாக்குடி, புதுத்தெரு, தெற்கு தெரு பகுதிகளை சோந்த மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை மாவட்ட எஸ்பி விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோகூர் கடைத்தெருவில் கள்ளச்சாராயம் சிலர் விற்று வருகிறார்கள். இதனால் அங்கன்வாடி, பள்ளிகூடம், கடைத்தெரு போன்ற பகுதிகளுக்கு பெண்கள் குழந்தைகள் சென்று வர முடியவில்லை. மேலும் ஆண்கள் கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு மனைவிகளை அடித்து உதைப்பதும்,