ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

தோகைமலை, அக்.26:  தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் அன்னாபிசேக வழிபாடு நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் கொண்டு வந்த வடிசாதம், காய்வகைள், பழவகைகள் உட்பட அனைத்து வகை பொருட்களையும் விராச்சிலேஸ்வரர் சிவபெருமான் மீது அணிந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.டி.மலை உள்பட கரூர், திருச்சி  போன்ற பகுதிலிருந்து திரலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.எடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் போன்ற சிவன் கோயில்களிலும் அன்னா அபிசேக வழிபாடுகள் நடந்தது.

Related Stories: