×

புதிய நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு

ஓசூர், அக்.18:ஓசூர் தாலுகாவுக்கு உட்பட்ட மத்திகிரி பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள், கலெக்டர் பிரபாகரனை சந்தித்து மனு அளித்தனர். அதில், அச்செட்டிபள்ளி, கொத்தகொண்டபள்ளி, பொம்மண்டபள்ளி ஆகிய இடங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி, புதிய தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச்:844) அமைக்க உள்ளது. இந்த சாலையை அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள மாநில நெடுஞ்சாலையுடன் (எஸ்ஹெச்:85)  தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஓசூர் நகராட்சியை கடந்து, கால்நடை பண்ணை அருகே தேசிய நெடுஞ்சாலையை அமைத்து கொள்ளலாம். இதனால் அரசுக்கு குறைந்தது ₹700 கோடி வரை மீதமாகும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கலெக்டர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விரிவான கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், விரைவில் இது தொடர்பாக மக்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!