×

50 சதவீத மானியத்தில் விதைகள் விநியோகம்

உடுமலை, அக். 16: குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில், கொங்கல் நகரம், புதுப்பாளையம், விருகல்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், சோளம், உளுந்து, கொண்டைக்கடலை போன்ற பயிர்களுக்கான சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. பெதப்பம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகளை பெறலாம். மேலும்குறிப்பிட்ட பரப்பிற்கு தேவையான திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையிலும், விதை நேர்த்தி செய்து விதைப்பதற்கு தேவையான உயிரியல் பூஞ்சாணக் கொல்லியும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்