சென்னை, அக். 16: பைக் வாங்கித்தர மறுத்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.கேளம்பாக்கம் அடுத்த கீழக்கோட்டையூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (42). இவரது கணவர் வெங்கடேசன். 3 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். தம்பதியின் 2வது மகன் கோவிந்தராஜ் (16). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர், தனக்கு விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி தரும்படி தனது தாயிடம் கடந்த ஒரு மாதமாக வற்புறுத்தி வந்தார். ஆனால், ‘‘நானே வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறேன். வறுமையான நிலையில் என்னால் எப்படி விலை உயர்ந்த பைக் வாங்கி தர முடியும்’’ என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, மீண்டும் இதுகுறித்து தனது தாயிடம் கோவிந்தராஜ் வலியுறுத்தி உள்ளார். அவர் மறுத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மாலை வேலை முடிந்து இந்திராணி வீடு திரும்பியபோது, மகன் கோவிந்தராஜ் வீட்டில் தூக்கிட்டு சடலமாக தொங்குவது தெரிந்தது. இதை பார்த்து அலறி துடித்தார்.