கரூர்,அக்.10: எந்தவித அடிப்படை வசதியும் இன்றி உள்ள நிழற்குடைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பகுதியை தாண்டியதும் வளையல்காரன்புதூர் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த பகுதியில் சாலையோரம் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. தரைத்தளம் போட்டு, மேற்கூரை மட்டுமே எழுப்பப்பட்ட நிலையில் மற்ற எந்த பணிகளும் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுவிட்டது. இதனால், உட்கார இருக்கைகள் இன்றி மணல் பரப்பிய நிழற்குடையில், வெளியூர்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் உட்கார்ந்து செல்லும் நிலைதான் இங்கு நிலவி வருகிறது. வளையல்காரன்புதூர் பகுதியில் இருந்து மாயனூர், குளித்தலை,