×

தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

தாராபுரம், அக்.5:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கரூர் சாலை மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் மனோகரன் (50), இவர், ராஜஸ்தானில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.  இந்நிலையில், நேற்று காலை மனோகரன் வீட்டிற்கு காரில் வந்த 3 மர்ம நபர்கள் முன்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து, உள்ளே சென்று பிரோவில் இருந்த தங்க நகைகள், ரூ.ஒரு லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் என,  ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். வீட்டின்  கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் சென்னையில் உள்ள மனோகரனுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காரில் வந்த கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்