×

பெரியார் சிலை அவமதிப்பு- வாலிபரை விசாரிக்க அனுமதி

தாராபுரம், செப். 26:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திடலில் உள்ள ெபரியார் சிலையை கடந்த 17ம் தேதி சேதப்படுத்தியும், அவமரியாதை செய்தது தொடர்பாக தாராபுரம் ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த நவீன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10நாள் கிளை சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நவீனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரினர். இந்த மனு மீதான விசாரணை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி சசிகுமார், ஒருநாள் மாலை 5 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, நவீனை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்