குழந்தைகளிடையே மலச்சிக்கல் அறிகுறிகள் காரணங்கள்

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகள், குறிப்பாக இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் குடல் இயக்கம் சார்ந்தது. இதனால் குழந்தைகளிடையே பரவலாக மலச்சிக்கல் இருக்கலாம். பெரும்பாலான இளம் குழந்தைகளுக்கு ஆரம்ப ஆண்டுகளில் மலச்சிக்கல் ஏற்படலாம். பெரும்பாலும் இது தற்காலிகமானது, பாதிப்பில்லாதது. மலக்குடல் வழியாகச் செல்லும் பாதை கடினமாக இருப்பதால், பொதுவாக மலத்தை வெளியேற்றுவதில் குழந்தை சிரமத்தை எதிர்கொள்ளலாம். குழந்தையின் வழக்கமான குடல் இயக்கங்களில் தற்காலிக சிக்கல்களுக்கு சில நடவடிக்கைகள், அணுகுமுறைகள் வழிவகுக்கலாம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான சில காரணங்கள்:

காரணங்கள்

1.நீண்ட நேரம் அடக்குதல்: வலியால் ஏற்படும் பயம், விளையாடுவதில் இருந்து ஓய்வு எடுக்காமல் இருப்பது, பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவதில் உள்ள அசௌகரியம் போன்ற காரணங்களால் நீண்ட நேரத்துக்கு மலம் கழிக்காமல் குழந்தை அடக்கி வைத்திருப்பது, இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான காரணம்.

2.டாய்லட் பயிற்சி பிரச்சனைகள்: குழந்தைகளுக்கான டாய்லட் பயிற்சியை பெற்றோர் முன்கூட்டியே தொடங்கினால், குழந்தை தானாகவே மலத்தை கழிக்காமல் அடக்குவதற்குக் கற்றுக்கொள்ளலாம். பின்னர் இது கட்டுப்பாடற்ற மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.

3.உணவுமுறை மாற்றம்: குழந்தையை திரவ உணவில் இருந்து திட உணவுக்கு ஆரம்ப கட்டத்தில் மாற்றுவது, அதுவும் நார்ச்சத்து குறைந்த உணவாக இருந்தால் செரிமானத்தை கடினமாக்கும்.

4.வழக்கத்தை மாற்றுதல்: பயணம், வானிலை மாற்றம், மன அழுத்தம், பள்ளி தொடங்கும் நேரம் போன்ற வழக்கத்தை மாற்றும் சூழ்நிலைகள் மலம் கழிப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தும்.

5. மற்ற காரணங்கள்: குழந்தைகளிடம் ஏற்படும் மலச்சிக்கலுக்கான பிற காரணிகள் மருந்துகள், ஒவ்வாமை, குடும்ப வரலாறு, வளர்சிதை மாற்ற - செரிமான பிரச்சனைகள், உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, உடலில் திரவங்களின் பற்றாக்குறை போன்றவை.

அறிகுறிகள்

மலச்சிக்கலின் முதல் முக்கிய அறிகுறி ஒரு வாரத்தில் மூன்று முறைக்கு குறைவாக மலம் கழிப்பது. ஒரு குழந்தையிடம் கவனிக்க வேண்டிய மற்ற அறிகுறிகள்: மலம் கடினமாக இருப்பது, மலத்தைக் கழிக்கக் கஷ்டப்படுவது, வலிமிகுந்த மலம் கழித்தல், குடலில் சத்தம், வயிற்று வலி -  வீக்கம், மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல். குழந்தை பெரும்பாலும் எரிச்சலுடன் இருப்பது, மலம் வரும்நேரத்தில் அசௌகரியமாக நுனிக்காலில் நிற்பதாகத் தோன்றினால், அது மலச்சிக்கல் இருப்பதற்கான அறிகுறி. மலச்சிக்கல் காரணமாக மலம் கழிப்பதை தவிர்க்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். வலிமிகுந்த மலம்கழித்தல் குழந்தை மலத்தை அடக்குவதற்கே வழிவகுக்கும்.

தீர்வு

நார்ச்சத்து நிறைந்த உணவு, அதிக திரவ உணவை அருந்துவது, உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல், மலம் கழிக்கும் முறையை தேவைக்கேற்ற வகையில் மாற்றுதல், கழிப்பறை பயிற்சியை சற்று நிறுத்துவது, வீட்டு வைத்தியம் போன்ற எளிய முறைகள் மூலம் இந்த நிலைமையை குணப்படுத்த முடியும். ஒரு வாரத்திற்கு மேல் மலச்சிக்கல் நீடித்தால், ஆசனவாயைச் சுற்றியுள்ள தோல் பிளந்து வலி ஏற்படுதல், மலக்குடல் வீழ்ச்சி, பசியின்மை, எடை இழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இந்த நிலைகள் ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்தால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

​அத்திப்பழங்கள்

அத்திப்பழங்கள் உலர்ந்த மற்றும் பழுத்த நிலைகளில் கிடைக்கிறது. அத்திப்பழங்களில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற ஒரு கிளாஸ் பாலில் ஒரு சில அத்திப்பழங்களை வேக வைத்து படுக்கைக்கு முன் குடித்து வாருங்கள்.

குடிக்கும்போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். இந்த பால் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளிலும் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் ஆளி விதைகளை சேர்த்து உண்ணலாம். அதிகாலையில் கூட வெதுவெதுப்பான நீரில் சில ஆளி விதைகளை போட்டு எடுத்து வரலாம். இது உங்க மலச்சிக்கலை போக்க உதவும்.

​கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. அவை ஆசனவாயில் சளி உற்பத்திக்கும் பெரிஸ்டால்சிஸுக்கும் உதவுகின்றன (குடல் புறணிக்குள் தொடர் சுருக்கங்கள் வயிற்றில் உணவை கடக்க உதவுகின்றன). இதனால் மலம் எளிதாக வெளியே வரும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

​லெமன் சாறு

ஆயுர்வேத மருத்துவர்கள் உங்கள் மலச்சிக்கலை போக்க லெமன் சாற்றைத் தான் பரிந்துரைக்கிறார்கள். லெமன் ஜூஸ் மற்றும் உப்புடன் ஒரு சூடான தண்ணீர் கலவை , காலையில் முதல் விஷயம் குடல்களை சுத்தப்படுத்தும் கலவையாக செயல்படுகிறது. உப்பு உள்ளடக்கம் விரைவாகவும் எளிதாகவும் மலத்தை கடக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். கரைசலில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மலச்சிக்கலை போக்க இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

​ஆரஞ்சு

ஆரஞ்சு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கிய சிறந்த பழமாகும். தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடுவது, காலையில் ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை என மலச்சிக்கலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்க உதவுகிறது.

உலர் திராட்சை

திராட்சையும் (கிஷ்மிஷ் பழம் ) நார்ச்சத்து நிரம்பியுள்ளன மற்றும் சிறந்த இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன. ஒரு சில உலர்ந்த திராட்சை பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

​கீரைகள்

கீரைகளுக்குக் குடலைச் சுத்தப்படுத்தும் மற்றும் புத்துயிர் ஊட்டும் தன்மைகள் காணப்படுகிறது. நீங்கள் தினமும் இரண்டு முறை சம அளவு தண்ணீரில் சுமார் 100 மில்லி கீரைச் சாற்றை கலந்து குடித்து வரலாம். இது உங்கள் மலச்சிக்கலை களைய உதவுகிறது.

​திரிபலா பவுடர்​

திரிபலா தூள் என்பது நெல்லிக்காய், கடுக்காய், தொடுக்காய் ஆகிய மூன்று கலவைகள் சேர்ந்தது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதோடு குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீ ஸ்பூன் இந்த பொடியை கலந்து தேன் கலந்து குடியுங்கள். இந்த கலவையை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது உங்க மலச்சிக்கலை களைய உதவும். மேற்கண்ட பொருட்கள் எல்லாம் இயற்கையாகவே மலச்சிக்கல் பிரச்சனையை களைய உதவுகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் குறைவு.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: