நன்றி குங்குமம் தோழி
*நடு முதுகில் வலி வருவதற்கு 99 சதவிகிதம் எலும்பு மூட்டுப் பிரச்சனை இல்லை. ஆனால் அதனை சுற்றியுள்ள தசைகளே அதற்கு காரணம்.
*கழுத்து, நடு முதுகு, இடுப்பு என மூன்று பகுதி தசைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே நாம் கைகளுக்கு, கழுத்துக்கு நிறைய வேலைகள் தரும்போது நடு முதுகு தசைகள் பாதிக்கப்படும்.
*இதனை கவனிக்காமல் விட்டால் அடுத்து கழுத்து வலி, இடுப்பு வலி, கால் மூட்டு வலி என ஒன்றன்பின் ஒன்றாக தசைகள் பாதிப்படையும். மேலும் இது வருடப் போக்கில், கழுத்து மற்றும் இடுப்பு எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.கண்டறிய...*நடு முதுகில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு வலி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.*அவர் முழுவதும் தசை பரிசோதனைகள் செய்து, எந்தெந்த தசைகள் பலவீனமாகவும், இறுக்கமாகவும் (Tightness)இருக்கிறது என கண்டறிவர்.*எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை.இயன்முறை மருத்துவம்...*முதலில் வலியை குறைக்க இயன்முறை மருத்துவ உபகரணங்கள், சில பயிற்சிகள், சில தசை நுணுக்கங்களை (Muscle Manual techniques) பயன்படுத்துவோம். இதில் முற்றிலுமாய் வலி குணமாகிவிடும்.*மேலும், வலி வராமல் இருக்கவும் சில உடற்பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்போம்.*தசைகளை பலப்படுத்த, இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்த என உடற்பயிற்சிகள் இருக்கும்.*இதனை தொடர்ந்து செய்து வந்தால் வலி மீண்டும் வராது.வராமல் தடுக்க...*ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளவர்கள், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடங்களாவது நடக்க வேண்டும்.*கைகள் மற்றும் கழுத்திற்கு தொடர்ந்து வேலை தரும் தொழிலில் இருப்பவராக இருந்தால், வலி இல்லை எனினும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, வலி வராமல் தடுக்க உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.*உடற்பயிற்சி கூடம் (ஜிம்) செல்பவர்கள் தங்கள் கூடத்தில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி பயன் பெறலாம்.*நம் உடல் தோரணையில் (Posture) ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை இயன்முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, அதற்கு தக்கவாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கூன் இருப்பது, கழுத்தை முன் நோக்கி வைத்திருப்பது, இடுப்பு உள்ளடக்கி இல்லாமல் முன்னோக்கி வைத்திருப்பது போன்றவை Bad Postures எனப்படும்.*எட்டு மணி நேரம் வேலை செய்கிறோம் எனில் எட்டு மணி நேரமும் நேராக நிமிர்ந்தே அமர்ந்திருக்க முடியாது என்பதால், பத்து நிமிடம் நேராக உட்கார்ந்து வேலை செய்தால் ஐந்து நிமிடம் சாய்ந்து அமரலாம். எனவே முழுநேரமும் கூன் போட்டு உட்காருவதை தவிர்க்கலாம்.மொத்தத்தில் உடலில் எங்கு வலி வந்தாலும் ‘இது சாதாரண வலியாகத்தான் இருக்கும்’ என அலட்சியப்படுத்தாமல், தகுந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலே போதும், பல பிரச்சினைகளை, பக்கவிளைவுகளை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்துகொண்டு, இந்த புத்தாண்டை இன்னும் இன்னும் உற்சாகமாய் தொடங்கலாம்.