×

பள்ளி மாணவர்களுக்கான சுகாதார போட்டிகள்

மன்னார்குடி, ஆக.14: கோட்டூர் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ மனவியர்களுக்கான சுகாதாரப் போட்டிகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம்  கோட்டூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரம் குறித்த படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டிகள் மற்றும் வினாடி வினாஆகிய போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளுக்கான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணியன் எடுத்து கூறினார். மேலும் ஆசிரியர்  பயிற்றுநர்கள் போட்டிகளை நடத்தினர். இதில்  விக்கிரபாண்டியம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகையன், கோட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் இளம்பரிதி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள்  மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் செல்வமணி நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...