பல்லாவரம்: அனகாபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆளவட்டம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பூக்குழி இறங்குதல் திருவிழா நிகழ்ச்சிக்காக நேற்று அதிகாலையே கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை ஏழு மணி அளவில் கோயிலின் முன்புறம் உள்ள திடலில் பூக்குழி இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.