சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு தொடர்பான ஜாமீன் மனுக்கு போலீஸ் பதிலளிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம், பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்ச் மேன், லிப்ட் மேன், வாட்டர் மேன் என பலரும் சேர்ந்து, அதேகுடியிருப்பில் உள்ள 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு போதை மாத்திரை மற்றும் மயக்க ஊசி போட்டு பல மாதங்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.