தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் பாபு (38). இவர் பிரபல ரவுடி, சீசிங்ராஜாவின் தம்பி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் சிட்லபாக்கம் பகுதியில் ஒரு சாலையோர தள்ளுவண்டி கடையில் தகராறில் ஈடுபட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.