கிருஷ்ணகிரி, ஆக. 14: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை தவளத்தில் இயங்கி வரும் ஸ்ரீபாரதி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் சண்முகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சங்கரன்(முன்னாள் சுகாதார ஆய்வாளர்) வரவேற்றார். பாரதி கல்வி நிறுவனத்தின் தனி அலுவலர் ராஜன் முன்னிலை வகித்தார். தேசிய குடல்புழு நீக்கும் நாளை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடற்புழு நீக்கும் வண்ணம் அவர்களுக்கு நிறுவனர் சண்முகம் மாத்திரைகளை வழங்கினார்.