×

விக்கிரவாண்டி அருகே தனித்தனி விபத்தில் 5 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி, ஆக. 14: விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புத்திரன் மகன் நாகராஜன்(50). இவர் உறவினர் சென்னை வெள்ளமேடு பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஏழுமலை என்பவருடன் பைக்கில் திண்டிவனம் பகுதியி
லிருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்தனர். பிடிஓ அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொரவி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மனைவி மங்கவரத்தாள்(50). இவர் உறவினர் மணவாளன் மகன் ராஜ்குமார் என்பவருடன் திருக்கனூர் பகுதியிலிருந்து பனையபுரம் நோக்கி பைக்கில் வந்தார். அப்போது பின்னால் வந்த மினி வேன் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

ஒரத்தூர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி சாந்தா(60). இவர் தனது மகன் வெங்கடேசன்(24) என்பவருடன் தும்பூர் பகுதியில் உள்ள நாகாத்தமன் கோயிலுக்கு பைக்கில் சென்றார். மீண்டும் தனது கிராமத்திற்கு சென்றபோது லட்சுமி
புரம்- ஒரத்தூர் பிரிவு சாலை அருகே பின்னால் வந்த பைக் மோதியது. இதில் சாந்தா கீழே விழுந்து காயமடைந்தார். இம்மூன்று விபத்துகள் குறித்தும் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை