×

மதுபாட்டில், சாராயம் விற்ற 3 பேர் கைது

மயிலம், ஆக. 14: பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் ேபாலீசார் நேற்று முன்தினம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பெருமுக்கல் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற சேகர் (45) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அருங்குணம் கிராமத்தில் சாராயம் விற்ற வேல்முருகனை கைது செய்து, 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பழமுக்கல் கிராமத்தில் சாராயம் விற்ற குமாரி (56) என்பவரை கைது செய்து 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை