×

பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

ரிஷிவந்தியம், ஆக. 14:  ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இங்கு வந்துதான் பஸ் ஏறி வீட்டிற்கு செல்கின்றனர். இங்கு உள்ள பயணிகள் நிழற்குடையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதாலும், பழுதடைந்த காரணத்தாலும் பயணிகள் நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக அமைத்து தரவேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை