×

சுற்றித்திரிந்த மான் மீட்பு

கள்ளக்குறிச்சி, ஆக. 13: கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. மழை பெய்யாததால் இவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன. இதேபோல் எஸ்.ஒகையூர் கிராமத்திற்குள் மான் ஒன்று நேற்று தண்ணீர் தேடி திரிந்து கொண்டு இருந்தது. தெரு நாய்கள், மானை விரட்டின. இதனை கண்ட கிராம பொதுமக்கள், மானை பாதுகாப்பாக பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர், மானை மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை