×

ஐஎப்இடி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் கழகம் துவக்க விழா

விழுப்புரம், ஆக. 13: விழுப்புரம் மாவட்டம் கெங்ராம்பாளையத்தில் அமைந்துள்ள ஐஎப்இடி பொறியியல் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் கழகத்தின் 2018-2019 கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ராஜா, துணைத்தலைவர் முகமது இலியாஸ், செயலாளர் சிவராம் ஆல்வா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில்குமார் மின் மற்றும் பொறியியல் துறை (தேசிய தொழில்நுட்ப, கழகம், திருச்சிராப்பள்ளி) கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன், கல்வி புலத்தலைவர் மற்றும் துணை முதல்வர் முனைவர் மெட்டில்டா, வேலைவாய்ப்பு புலத்தலைவர் பேராசிரியர் ஆஷா, ஆராய்ச்சி கழகத்தலைவர் புகழேந்திரன், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் சுஜித் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவை மின் மற்றும் மின்னணு துறை பேராசிரியர்கள் வீரராகவன் மற்றும் நிவேதா ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை