×

ராணிப்பேட்டை அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது

ராணிப்பேட்டை, ஆக.13: சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன்(பொறுப்பு) உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு அருகே பாலாற்று சுடுகாட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(45), சகாதேவன் (49) ஆகிய இருவரையும் கைது செய்து ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்