×

நடமாடும் வாகனம் மூலம் மேல்புறம் யூனியனில் மண் பரிசோதனை

நாகர்கோவில், ஜூன் 21: குமரிமாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஆய்வு ஊர்தி மேல்புறம் வட்டாரத்தில் ஜூன் 25 ம் தேதி அன்று அருமனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 26ம் தேதி அன்று அண்டுகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் 27ம் தேதி  விளவங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் பயணம் மேற்கொண்டு மண் ஆய்வுப்பணி மேற்கொள்ள உள்ளது. எனவே, விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மண்மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து உடனடியாக மண்மாதிரி முடிவுகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...