தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வார்டுகளில், மின்விசிறிகள் பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 900 உள்நோயாளிகளும் தினசரி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை, ஆண்கள், பெண்கள் வார்டு, விபத்து அவசர சிகிச்சை வார்டு, கண், பல், எலும்பு, பிரசவம், பச்சிளங்குழந்தைகள் உள்பட 58 வார்டுகள் உள்ளன.