வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர்.