பாலிவுட்டில் அறிமுகமாக நடிகைகள் விரும்புகிறார்கள்: காஜல் அகர்வால் வேதனை

சென்னை: இந்தி படங்களில் நடிக்கவே நடிகைகள் விரும்புகிறார்கள். ஆனால் தென்னிந்திய சினிமாதான் சிறந்தது என்கிறார் காஜல் அகர்வால்.

திருமணத்துக்கு பிறகு காஜல் அகர்வால் நடிப்பில் கோஸ்டி என்ற தமிழ் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இப்போது இந்தியன் 2, கருங்காப்பியம் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்து முடித்த பாரீஸ் பாரீஸ் படம் இன்னும் ரிலீசாகாமல் பிரச்னையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் காஜல் அகர்வால் கூறியதாவது: இந்திதான் எனக்கு தாய் மொழி. ஆனால் என்னை உலகத்துக்கு அறிமுகம் செய்தது தமிழ், தெலுங்கு சினிமாதான். இந்தியில் சில படங்களில் நடித்தாலும் எனக்கு புகழை தந்தது தென்னிந்திய சினிமாதான். நடிகைகள் பலர் இந்தியில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

வாய்ப்பு குறையும்போது, தென்னிந்திய சினிமாவில் நடித்தால் போதும் என நினைக்கிறார்கள். காரணம், பாலிவுட்டில் அறிமுகமானால் தேசிய அங்கீகாரம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அப்படி கிடையாது. இப்போது தென்னிந்திய சினிமா உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்னிந்திய திரையுலகில் இருக்கும் அறம், ஒழுக்கம், மற்றவர்களை மதிக்கும் போக்கு வேறு எந்த திரையுலகிலும் இல்லை. பாலிவுட்டில் கொஞ்சமும் கிடையாது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் திறமையான டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டில் கூட அவர்களைத்தான் நாடுகிறார்கள். மேலும் தென்னிந்திய சினிமாதான் கடந்த பல ஆண்டுகளாக சிறந்த படங்களை கொடுத்து வருகிறது. சமீபத்தில் இந்த விகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Related Stories: