கடலூர்: கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வட்டாட்சியர் விஜய் ஆனந்த் உத்தரவிட்டார். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நோ ஹெல்மெட், நோ பெட்ரோல் என்ற வாசகத்துடன் பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.