சென்னை: முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டினர். வெட்டு காயங்களுடன் வாலிபர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் சிந்தாதிரிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை என்.என்.காலனியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (29). இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்சுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப், சஞ்சய், விஜய்பாபு, வெங்கடேஷ், அப்பு ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது வந்தது. இதனால் ஜேம்சுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஜேம்ஸ் வீட்டில் இருந்தார். அப்போது பிரதீப், சஞ்சய், விஜய்பாபு, வெங்கடேஷ், அப்பு ஆகியோர் பழி தீர்க்க அரிவாளுடன் ஜேம்ஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரை வெட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜேம்ஸ் உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து தப்பி ஓடினார். ஆனால், 5 ேபரும் விடாமல் ஜேம்ஸை ஓட ஓட விரட்டி சென்று வெட்டினர். இதைபார்த்த பொதுமக்கள் நாலாபுறம் சிதறி ஓடினர். ஒரு கட்டத்தில் ஜேம்ஸை 5 பேரும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜேம்ஸ் ரத்த வெள்ளத்தில் ஓடினர்.