தந்தை கண்டித்ததால் 9 வயது மாணவி தற்கொலை

திருவள்ளூர்: விளையாடிக்கொண்டிருந்த மகளை படிக்கச் சொல்லி தந்தை கண்டித்ததால், மனமுடைந்த 9 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், பெரிய குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரதிக்‌ஷா(10). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறார். நேற்று இரவு பிரதிக்‌ஷா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது தந்தை கிருஷ்ணமூர்த்தி மகளை தேர்வு நேரம் என்பதால் படிக்கச் சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனவேதனை அடைந்த மகள் பிரதிக்ஷா வீட்டு ஜன்னலில் டவளால் கழுத்தில் இறுக்கி கொண்டுள்ளார். இதனால் மயங்கி கீழே சாய்ந்த அவரை பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரதிக்‌ஷா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: