சிவகங்கை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். சிறைத்தண்டனை விதிப்பு, எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டை கண்டித்து. சிவகங்கை அரண்மனைவாசல் முன் காங். கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.