ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங். கட்சியினர் மறியல் போராட்டம்: சிவகங்கையில் 50 பேர் கைது

சிவகங்கை:  ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். சிறைத்தண்டனை விதிப்பு, எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டை கண்டித்து. சிவகங்கை அரண்மனைவாசல் முன் காங். கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கேஆர்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், பாஜ அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் சோணை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியல் செய்த 50 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: