காரைக்குடி: அரிசியில் சிக்கி மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்தவர் குருசேகர். இவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை சாக்கோட்டை மித்ராவயல் சாலையில் உள்ளது. இங்குள்ள அரிசி சேமிக்கும் கலத்தில் இருந்து அரிசியை சாக்குப்பையில் பிடிக்கும் பணியில் கண்டனூர் திலகர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் முத்துக்குமார் (45), பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார் (30) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.